கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சீனா இன்று எழுத்து மூலம் அறிவிக்கும்!

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திற்கு இன்று (22) எழுத்து மூலம் சீனா அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், சீனாவின் நிலைப்பாடு அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் திறைசேரி பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் சீன எக்சிம் வங்கியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் முதல் நாடாக இந்தியா திகழ்வதாகவும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்’ குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு வடிவத்திலும் கடன் நிவாரணம் வழங்குவதன் மூலம் இலங்கையின் நடுத்தர கால மற்றும் நீண்ட கால கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இருப்பதாக கடிதம் மூலம் சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...