காலியில் எச்.ஐ.வி நோயாளர்களின் அதிகரிப்பு

Date:

அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து காலி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டொக்டர் தர்ஷனி விஜேவிக்கிரம இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2021 இல் 25 எச்.ஐ.வி உறுதிபடுத்திய நபர்கள் மற்றும் அதற்கு முன்னைய ஆண்டில் 36 பேரும் கண்டறியப்பட்டனர்.

இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலும் நோயாளிகள் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாட்டிலிருந்து 427 நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 4831 பேர் வரை அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எயிட்ஸ் அபாயகரமான அளவில் பரவி வருவதாக கலாநிதி திருமதி விஜேவிக்ரம கவலை தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...