தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் நாளை!

Date:

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்றத்தின் அலுவல் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை எனக் கூறி, இந்தச் சட்டமூலத்தை தற்போதைக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தின.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சட்டமூலத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நேற்று தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...