அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைப்பு!

Date:

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அமைச்சுக்களும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதத்தை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திறைசேரி இந்த வருடம் எதிர்பார்த்ததை விட மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும், அந்த நிலையை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜனவரியில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதும் ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக,...

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்

கொழும்பில் இருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733,...