ஆதிவாசி தலைவர்கள் அரசியலமைப்பு , பிற உரிமைகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

Date:

அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் பிற உரிமைகள் கோரி பழங்குடியினர் அல்லது வேதா சமூகத்தின் தலைவர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

உருவரிகே வன்னில அத்தோ உட்பட 10 வேதா சமூகத் தலைவர்கள் அண்மையில் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

புகாரில் எழுப்பப்பட்ட முக்கியப் பிரச்சினைகள், சமூகத்திற்கான அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லாமை, அவர்களின் சமூகப் பொருளாதார, கலாசார மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கைகளின் தோல்வி, ஆதிவாசி சமூகத்தின் பாரம்பரிய உரிமைகள் மீது சட்ட அமுலாக்கத்தின் உணர்வின்மை, மற்றும் அவர்களின் குற்றமாக்கல் ஆகியவை அடங்கும்.

சுற்றாடல் அமைச்சு, வனப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், காணி அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் ஆகிய 10 அரச அமைப்புகளை பிரதிவாதிகளாக அவர்கள் பெயரிட்டுள்ளனர் .

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...