House of Fashion தாக்குதல் சம்பவம்: உண்மையில் என்ன நடந்தது?

Date:

பம்பலப்பிட்டியில் உள்ள ஹவுஸ் ஒப் ஃபேஷன் ஆடைக் கடையில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மற்றொரு வாகனம் இடையூறாக நின்றதால், வாடிக்கையாளர் ஒருவர் தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியே நகர்த்த முடியாத நிலையில், மோதல் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர் ஊழியர்களிடம் புகார் அளித்ததால், இடையூறு விளைவிக்கும் வாகனத்தை நகர்த்துவதற்கு கடையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

எனினும் சிறிது நேரத்தில் வாடிக்கையாளர் பொறுமை இழந்து கடையின் மேலாளருக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக  கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, மேலும் சில ஊழியர்கள் வாடிக்கையாளரை இரக்கமின்றி தாக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...