ஆதிவாசி தலைவர்கள் அரசியலமைப்பு , பிற உரிமைகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

Date:

அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் பிற உரிமைகள் கோரி பழங்குடியினர் அல்லது வேதா சமூகத்தின் தலைவர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

உருவரிகே வன்னில அத்தோ உட்பட 10 வேதா சமூகத் தலைவர்கள் அண்மையில் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

புகாரில் எழுப்பப்பட்ட முக்கியப் பிரச்சினைகள், சமூகத்திற்கான அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லாமை, அவர்களின் சமூகப் பொருளாதார, கலாசார மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கைகளின் தோல்வி, ஆதிவாசி சமூகத்தின் பாரம்பரிய உரிமைகள் மீது சட்ட அமுலாக்கத்தின் உணர்வின்மை, மற்றும் அவர்களின் குற்றமாக்கல் ஆகியவை அடங்கும்.

சுற்றாடல் அமைச்சு, வனப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், காணி அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் ஆகிய 10 அரச அமைப்புகளை பிரதிவாதிகளாக அவர்கள் பெயரிட்டுள்ளனர் .

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...