இலவச எரிபொருளை விநியோகிக்க 122 மில்லியன் செலவாகும்!

Date:

சீன அரசாங்கத்தினால் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் டீசல் கையிருப்பை விநியோகிப்பதற்காக அரசாங்கத்தினால் 122 மில்லியன் ரூபா செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த டீசல் கையிருப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் பவுசர்கள் ஊடாக விநியோகிக்கப்படும்.

விவசாய அமைச்சின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இவ்வருடத்திற்கு கிடைக்கப்பெறவுள்ள நிதியைப் பயன்படுத்தி உரிய தொகையை இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கம் இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிய 6.8 மில்லியன் லீற்றர் டீசல் தொகை விவசாயிகள் அபிவிருத்தி திணைக்களத்தினால் அறுவடைக்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...