உள்ளூராட்சி தேர்தல்: சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தல்களிலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாகவே போட்டியிட்டதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அரசியல் அரங்கில் அதன் நிலையை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இ.தொ.கா சுயேட்சையாக கட்சி சின்னத்தில் போட்டியிடும் போது ஏனைய அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதம் ஓரளவு குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக போட்டியிடுவது இ.தொ.கா.வுக்கு பாதகமானது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...