கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மு.கா தனித்துப் போட்டியிடும்: ரஊப் ஹக்கீம்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார்.

மருதமுனையில் நேற்று (10) நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் சம்மந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி எவ்வாறு தேர்தலில் களம் காண்பது என்பது பற்றியும் இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும் என்பதனை கட்சியின் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...

கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல்...