சூப்பர் மார்க்கெட்களில் திருடர்கள் தொல்லை!

Date:

நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

அதற்கமைய,கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள பிரதான பல்பொருள் அங்காடியின் முகாமையாளர் ஒருவர் கூறுகையில், பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடுபவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டாலும், அந்த திருடர்கள் கூரிய ஆயுதங்களால் ஊழியர்களை காயப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் இருவர் திருடர்களால் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதில் காயமடைந்துள்ளதாக முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...