தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் நாளை!

Date:

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்றத்தின் அலுவல் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை எனக் கூறி, இந்தச் சட்டமூலத்தை தற்போதைக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தின.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சட்டமூலத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நேற்று தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...