பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்!

Date:

அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேரூந்து கட்டணத்தை குறைக்க தமக்கு அனுமதியில்லை என தனியார் பேரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பேரூந்து கட்டணத்தை குறைப்பது குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அதிவேக பேரூந்து கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...