ATM கொள்ளை : மூன்று வெளிநாட்டவர்கள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது!

Date:

வங்கி ATM கொள்ளையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பொலிஸ் உயர் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மீகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரி, 02 பல்கேரியர்கள், கனேடிய பிரஜை ஒருவர் மற்றும் இலங்கையர் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...