கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மு.கா தனித்துப் போட்டியிடும்: ரஊப் ஹக்கீம்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார்.

மருதமுனையில் நேற்று (10) நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் சம்மந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி எவ்வாறு தேர்தலில் களம் காண்பது என்பது பற்றியும் இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும் என்பதனை கட்சியின் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...