‘மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்’

Date:

மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதும் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த அபாயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஐந்நூறு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தேயிலை துாள் உற்பத்தி வெகுவாக குறைந்து வருமானம் குறைந்துள்ள இவ்வேளையில் மின்கட்டணத்தை அதிகப்படுத்தினால் தேயிலை கைத்தொழில்  பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரப் பிரச்சினை மற்றும் காலநிலை காரணமாக தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் அரசிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இந்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை நேற்று (9) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...