வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் ஏற்பாட்டில், புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு இன்று இடம்பெறவுள்ளது.
இரவு 8.00 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் நிகழ ஏற்பாடாகிவரும் இக்கவியரங்கு, “முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்..!” என்ற கருப்பொருளில் 09 கவிஞர்களின் பிரசன்னத்தில் நடைபெறவுள்ளது.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பன்முக ஆளுமைகள் பலகோணங்களில் பகிரப்படவுள்ள இக்கவியரங்கில் பின்வரும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இந் நிகழ்வு கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமையில் நடைபெறும்.
வித்தியாசமான தலைப்புகளில் விழுமிய உணர்வுகள் சுமந்து விரிவான ஏற்பாடுகளுடன் தயாராகிவரும் இக்கவியரங்கம், நிச்சயம் நிறைவான பல படைப்புகளை வெளிக் கொணரவிருப்பதோடு அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக ஒரு திறந்தவெளி அரங்கில் மேடைப்படுத்தப்படவுள்ளது.