செபால் அமரசிங்கவின் வழக்கு விசாரணைகளை முடிக்க நீதிமன்றம் தீர்மானம்!

Date:

தலதா மாளிகையை  அவமதித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் செபால் அமரசிங்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேபால் அமரசிங்க, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், மகாநாயக்க தேரர்களிடமும் பௌத்த சமூகத்திடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீர்ஸ், அவ்வாறு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், வழக்கை முடித்துக் கொள்ளத் தயார் எனத் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முறைப்பாட்டாளர் பௌத்த தகவல் மையத்தின் வணக்கத்திற்குரிய அகுருவெல்லே ஜினாநந்த தேரர் மற்றும் ஏனையவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

அதன்படி, வழக்கு விசாரணைகளை முடிக்கத் தயாராக இருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீர்ஸ் நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்படி, வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானித்த நீதிமன்றம், சந்தேகநபரான சேபால் அமரசிங்கவை விடுதலை செய்ய உத்தரவிட்டது. தலதாவை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட செபல் அமரசிங்க, நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...