நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

Date:

நீதிமன்ற உத்தரவை மீறி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 18 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றிரவு (பெப்.11) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், இந்த குழுவினர் நேற்றைய தினம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...