பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு, இலங்கை நன்கொடை

Date:

துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 1500 கிலோ தேயிலை வழங்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக சுமார் 55,000 டொலர்கள் மதிப்புடைய போர்வைகள், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்றன.

மேலும்  இலங்கையில் உள்ள WingsofHumanity மற்றும் Soup Kitchen இன் ஒத்துழைப்புடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட 1254 குளிர்கால போர்வைகள் மற்றும் 17 மின்உற்பத்தி இயந்திரங்கள்  நேற்று இரவு துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...