‘இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை கடைகளில் விற்க முடியாது’

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் இந்நாட்டு நுகர்வோரை பாதித்த முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆனால், முட்டைகளை எளிதில் இறக்குமதி செய்யக்கூடிய பல நாடுகளில் இருந்து பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருவதால், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் அதன் தேவையை கருத்தில் கொண்டு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகளை பொது பாவனைக்காக கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி அமைச்சர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொத்தலாவல அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பேக்கரி தொழிலில் இந்த முட்டைகளை கையாளும் போது கையுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் முட்டை ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பாக அழிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...