உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது!

Date:

மின்சாரக் கட்டண திருத்தத்தின் காரணமாக  உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை திருத்தம் இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய உணவு வகைகளின் விலை திருத்தம் இடம்பெறாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் “சிற்றுண்டிச்சாலைகளில் சோலார் பேனல்களை நிறுவும்படி  கேட்டோம்.  இதற்கு முன்  மின் கட்டணத்தை உயர்த்தினாலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. எரிவாயு அதிகரித்த போதும் நாம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...