தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்’

Date:

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களிலும் சிலர் அந்த அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு  பாடசாலையில் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சிலர் மறந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், மக்கள் இரண்டு, மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்தனர்.ஆனாலும் அந்த பிரச்சனையை தன்னால் சமாளிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் செலவினங்களும் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகவே மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...