தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்’

Date:

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களிலும் சிலர் அந்த அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு  பாடசாலையில் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சிலர் மறந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், மக்கள் இரண்டு, மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்தனர்.ஆனாலும் அந்த பிரச்சனையை தன்னால் சமாளிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் செலவினங்களும் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகவே மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...