‘10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வருகின்றன’

Date:

போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் வளர்ப்பு பெற்றோர்களாக முன்வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும் 11,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்யக தனிப்பட்ட முறையில் தலையிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போசாக்கு குறைபாடுள்ள பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோராக செயற்படுவதற்கு நாடளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் 3000 பிள்ளைகளுக்கு பங்களிப்பு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக, இந்த வேலைத்திட்டத்திற்கு முன்வந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் பதினான்காயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு வர்த்தகர்களும் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...