தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்’

Date:

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களிலும் சிலர் அந்த அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு  பாடசாலையில் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சிலர் மறந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், மக்கள் இரண்டு, மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்தனர்.ஆனாலும் அந்த பிரச்சனையை தன்னால் சமாளிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் செலவினங்களும் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகவே மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...