‘தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும்’

Date:

உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரை செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலும் இவ்வாறே நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேநேரம், நிதி இல்லாத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உறுதியளித்தவாறு நடத்த முடியாமல்போகும் நிலை ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரியவாறு நடத்த நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி உறுதிப்பாட்டை வழங்கியிருந்தது.

எவ்வாறிருப்பினும், அந்த உறுதிமொழிக்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரையில் நிதி கிடைக்கவில்லை என மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையின் அடிப்படையில் மாநகர சபைகளின் கட்டுப்பாடு மாநகர ஆணையாளர்களின் கீழும் மாநகர சபை மற்றும் பிராந்திய சபைகளின் கட்டுப்பாடு மாநகர செயலாளர்கள் மற்றும் பிராந்திய சபை செயலாளர்களின் கீழும் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மத்திய மாகாண பாடசாலைகள் நாளை மற்றும் திங்கட்கிழமைகளில் மூடப்படும்!

சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (19)...

பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பங்கேற்பு.

பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய...

சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்

நிலவி வரும் சீரற்ற காலநிலையால், 8 மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய்...

119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்

உண்மையான அவசரநிலைகளைப் புகாரளிக்க 119 அவசர தொலைபேசி சேவையை கண்டிப்பாகப் பயன்படுத்த...