பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு, இலங்கை நன்கொடை

Date:

துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 1500 கிலோ தேயிலை வழங்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக சுமார் 55,000 டொலர்கள் மதிப்புடைய போர்வைகள், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்றன.

மேலும்  இலங்கையில் உள்ள WingsofHumanity மற்றும் Soup Kitchen இன் ஒத்துழைப்புடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட 1254 குளிர்கால போர்வைகள் மற்றும் 17 மின்உற்பத்தி இயந்திரங்கள்  நேற்று இரவு துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...