‘பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்’

Date:

நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன் விளைவாக எதிர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்பு சபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரையா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காணொளி காட்சிகளின்படி, எதிர்ப்பாளர்கள் தப்பிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனினும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் தரநிலைகளை மீறி இலங்கை பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகையை பயன்படுத்தியதாக ஹரீந்திரினி கொரையா சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...