‘பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்’

Date:

நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன் விளைவாக எதிர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்பு சபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரையா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

காணொளி காட்சிகளின்படி, எதிர்ப்பாளர்கள் தப்பிப்பதற்கான சாத்தியம் இல்லாமல் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனினும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் தரநிலைகளை மீறி இலங்கை பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகையை பயன்படுத்தியதாக ஹரீந்திரினி கொரையா சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...