ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

Date:

ரயில் சாரதிகளினால்  முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை  முடிவுக்கு வந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொழில் நடவடிக்கை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட இவ்விடயம் தொடர்பாக பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

இன்று காலை புகையிரத அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல்  ரயில்கள் வழமையாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...