வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது!

Date:

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

விசேட வைத்தியர்கள், அரச பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு மற்றும் உதவி வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் நேற்று இந்த தொழிற் சங்க போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதனால், பல அரச மருத்துவமனைகளில் நோயாளர் பாதிக்கப்பட்டனர்.

எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திரு.பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...