‘10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வருகின்றன’

Date:

போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் வளர்ப்பு பெற்றோர்களாக முன்வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும் 11,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்யக தனிப்பட்ட முறையில் தலையிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போசாக்கு குறைபாடுள்ள பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோராக செயற்படுவதற்கு நாடளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் 3000 பிள்ளைகளுக்கு பங்களிப்பு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக, இந்த வேலைத்திட்டத்திற்கு முன்வந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் பதினான்காயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு வர்த்தகர்களும் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...