75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம்!

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதனை ரம்யா லங்கா நிறுவனம் புத்தளம் மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது மருத்துவமனைக்குத் தேவையான 35 மடிக்கக் கூடிய கட்டில்களும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான படுக்கையும், மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.

நாட்டில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரம்யா லங்கா நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிரதான நிகழ்வு புத்தளம் பிரதேச செயலாளர் திருமதி ரங்கனா ஜயதிலக்க, புத்தளம் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்க, புத்தளம் பொலிஸ் நிலைய சிரேஷ்ட அத்தியட்சகர் எச்.சி. ஏ. புஷ்பகுமார மற்றும் ரம்யா லங்கா நிறுவனம் சார்பாக அலிசப்ரி கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...