உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது!

Date:

மின்சாரக் கட்டண திருத்தத்தின் காரணமாக  உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை திருத்தம் இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய உணவு வகைகளின் விலை திருத்தம் இடம்பெறாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் “சிற்றுண்டிச்சாலைகளில் சோலார் பேனல்களை நிறுவும்படி  கேட்டோம்.  இதற்கு முன்  மின் கட்டணத்தை உயர்த்தினாலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. எரிவாயு அதிகரித்த போதும் நாம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...