உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது!

Date:

மின்சாரக் கட்டண திருத்தத்தின் காரணமாக  உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை திருத்தம் இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய உணவு வகைகளின் விலை திருத்தம் இடம்பெறாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் “சிற்றுண்டிச்சாலைகளில் சோலார் பேனல்களை நிறுவும்படி  கேட்டோம்.  இதற்கு முன்  மின் கட்டணத்தை உயர்த்தினாலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. எரிவாயு அதிகரித்த போதும் நாம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...