மீண்டும் பாராளுமன்றில் பௌசி: முஜிபுருக்கு பதிலாக எம்.பி.யாக பதவியேற்றார்!

Date:

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று(வியாழக்கிழமை) மீண்டும் நாடாளுமன்றத்திற்கு  வருகைத்தந்துள்ளார்.

அதற்கமைய அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் பெயரிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 48 ஆயிரத்து 701 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...