விமான நிலையத்தின் சரக்கு முனையம் ஊடாக சீனாவுக்கு பறந்த கோட்டா!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டனர்.

அவர்கள்  மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்று அங்கிருந்து சீனாவுக்குப் புறப்படுவார்கள் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய இன்று நள்ளிரவு 12.25 மணியளவில் மலேசியன் ஏர்லைன்ஸின் MH-178 விமானத்தில் கோட்டாபயவும் அவரது மனைவியும் மலேசியாவிற்கு புறப்பட்டனர்.

ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற, விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் ஜனாதிபதியொருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறை (V.I.P. Lounge) ஊடாகப் பணம் செலுத்தியோ அல்லது சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாகவோ செல்வதற்கு வசதிகள் காணப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் சரக்கு முனையத்தை பயன்படுத்தி சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...