இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு வர்த்தக அமைச்சு பொறுப்பேற்கிறது!

Date:

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் முட்டை கையிருப்புக்கு முழுப்பொறுப்பேற்பதாக  வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவும் பிரதேசத்தில் இருந்து இந்த நாட்டுக்கு முட்டைகள் கையிருப்பு அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக் கையிருப்புகளுக்குத் தேவையான அனைத்து தரச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு முட்டைகளை கொண்டு வந்த பின்னர், சந்தைக்கு வெளியிடும் போது இது தொடர்பான அனைத்து தரச் சான்றிதழ்களையும் முன்வைப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...