*கல்முனை வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களை இடமாற்றுவதற்கு தீர்மானம்: குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சு கவனம்!*

Date:

கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் 09 பேரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் இஸ்லாமிய  ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினைக்கு உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தரத் தீர்வினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது.

இந்தச் சந்திப்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கடந்த சில நாட்களாகப் பெரும் கவனத்தை ஈர்த்து வரும் இந்த உணர்வுப்பூர்வமான விவகாரம் குறித்து, அனைத்துத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் விரிவாகக் கேட்கப்பட்டன.

மருத்துவமனை கட்டமைப்பின் சீரான செயல்பாட்டையும், அனைத்துச் சேவைப் பயனாளர்களின் ஒற்றுமையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உரிமைகளையும் உறுதிசெய்யும் அமைதியான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வை எட்டுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின் முடிவில், குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடனடி மற்றும் குறுகிய கால நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கான நீண்ட கால நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட்டு விரைவாகச் செயல்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக...

ஊவா, மட்டு, அம்பாறையில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்...

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...