இலங்கைக்கான நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தது!

Date:

இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  உறுதிப்படுத்தினார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கு  7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் திட்டத்திற்கு IMF நிறைவேற்று  சபை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குநர்களுடனான அனைத்து விவாதங்களிலும் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான நிலையை அடைவதற்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...