2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் (Normal Intake) கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேன்முறையீடுகளை (Appeals) ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
பல்கலைக்கழகப் பிரவேசம் மற்றும் பதிவு குறித்த மேலதிக விபரங்களைப் பெற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk என்ற முகவரிக்கு பிரவேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
