பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நடவடிக்கை!

Date:

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

இந்த சட்டமூலம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு மிகவும் ஒத்ததாக இருப்பதாக சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பை மீறுகிறது என்பதோடு மக்கள் அனுபவிக்கும் சிவில் உரிமைகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இந்த சட்டமூலத்தினால் பாதுகாக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

சுற்றுலாத் துறை ஊடாக 2900 மில்லியன் டொலர் வருமானம்

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத் துறை ஊடாக...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வென்னவத்த மக்களுக்கு காயல்பட்டினம் மக்களின் நிவாரண உதவி.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள...

சர்வதேச அரபு மொழி தினத்தை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான...

முதியோருக்கான டிசம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு

முதியவர்களுக்கான டிசம்பர் மாத அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குகளில்...