புதிதாக தெரிவுசெய்யப்பட்ட காதிமார்களுக்கான செயலமர்வு!

Date:

புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதிபதிகளுக்கான முழு நாள் பயிற்சி அமர்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, (12) கண்டியில் டொபாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இப் பயிற்சி செயலமர்வை இலங்கை காதி நீதிபதிகள் சபை, ஸம் ஸம் பவுண்டேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, சிறப்பாக திட்டமிடப்பட்ட விளக்கக் காட்சிகள், காதி அமைப்பு மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய பயிற்சியுடன் கூடிய செயலமர்வாக இருந்தது.

இப் பயனுள்ள நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இடம்பெற்ற இரு அமர்வுகளை, இலங்கை காதி நீதிபதிகள் மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். ஏ.எம். ஃபௌஸ், ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர், அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீஃபா, பாடநெறிப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், மற்றும் காதி சபையின் துணைத் தலைவர் இஃபாம் யஹியா ஆகியோர் நடத்தினார்கள்.

இதுவரை நீதிச் சேவைகள் ஆணைக்குழு 65 பேரில் 55 காதிகளை நியமித்துள்ளது. இவர்களில் 52 காதிமார்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...