ரமழானில் உம்ரா சென்றவர்களின் பஸ், விபத்து: 20 பேர் மரணம்

Date:

உம்ரா யாத்திரிகர்களைச் சுமந்து சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் சவூதி அரேபியா அசீர் நகருக்கு வடக்கே ஷார் பாஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததுள்ளது.

உம்ரா செய்வதற்காக காமிஸ் முஷைத்தில் இருந்து மக்கா நோக்கி யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மஹயில் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேரூந்து கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. வாகனத்தில் பிரேக் ஒழுங்காகச் செயற்படாமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 20 பேர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் இந்தியர்கள் 16 பேர் அடங்குகின்றனர். பேருந்தில் இந்தியர்கள் தவிர வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

காயமடைந்த 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காயமடைந்தவர்கள் அபாஹா ஆசிர் மருத்துவமனை மற்றும் ஜெர்மன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...

தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும்...