ரமழானில் உம்ரா சென்றவர்களின் பஸ், விபத்து: 20 பேர் மரணம்

Date:

உம்ரா யாத்திரிகர்களைச் சுமந்து சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் சவூதி அரேபியா அசீர் நகருக்கு வடக்கே ஷார் பாஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததுள்ளது.

உம்ரா செய்வதற்காக காமிஸ் முஷைத்தில் இருந்து மக்கா நோக்கி யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மஹயில் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

பேரூந்து கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. வாகனத்தில் பிரேக் ஒழுங்காகச் செயற்படாமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 20 பேர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் இந்தியர்கள் 16 பேர் அடங்குகின்றனர். பேருந்தில் இந்தியர்கள் தவிர வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

காயமடைந்த 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காயமடைந்தவர்கள் அபாஹா ஆசிர் மருத்துவமனை மற்றும் ஜெர்மன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...