இன்றும் பல துறைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்!

Date:

திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது போதாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலந்துரையாடலில் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் எட்டப்படாததால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கல்விசார் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...