நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று விஷேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இதன்போது பணவீக்கம் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பணவீக்கமும் 54வீதமாகக் குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உரங்களை வழங்குவதன் மூலம், நாடு வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றதாகவும், ஜூன் 2022 முதல் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி வழமைக்குத் திரும்பியதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாடு ஸ்திரமான பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டை ஸ்திரப்படுத்தியதும் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எந்த வகையான நாசகார செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்றொரு ஜூலை 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.