புதிதாக தெரிவுசெய்யப்பட்ட காதிமார்களுக்கான செயலமர்வு!

Date:

புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதிபதிகளுக்கான முழு நாள் பயிற்சி அமர்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, (12) கண்டியில் டொபாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இப் பயிற்சி செயலமர்வை இலங்கை காதி நீதிபதிகள் சபை, ஸம் ஸம் பவுண்டேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, சிறப்பாக திட்டமிடப்பட்ட விளக்கக் காட்சிகள், காதி அமைப்பு மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய பயிற்சியுடன் கூடிய செயலமர்வாக இருந்தது.

இப் பயனுள்ள நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இடம்பெற்ற இரு அமர்வுகளை, இலங்கை காதி நீதிபதிகள் மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். ஏ.எம். ஃபௌஸ், ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர், அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீஃபா, பாடநெறிப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், மற்றும் காதி சபையின் துணைத் தலைவர் இஃபாம் யஹியா ஆகியோர் நடத்தினார்கள்.

இதுவரை நீதிச் சேவைகள் ஆணைக்குழு 65 பேரில் 55 காதிகளை நியமித்துள்ளது. இவர்களில் 52 காதிமார்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...