முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டின் 2 ஆவது பிணைமுறி மோசடி வழக்கில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 10 குற்றவாளிகளை விடுவிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற கடந்த மார்ச் 4 ஆம் திகதி உத்தரவிட்டது.