வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Date:

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அனைத்து பிராந்திய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஈடுபடவுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...