வவுனியாவில் வீடொன்றில் இருந்து 04 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!

Date:

வவுனியா  குட்செட் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை  கணவன் மனைவி மற்றும் அவர்களின்  இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, வீட்டின் அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், தந்தை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை 41 வயதுடைய நபர் எனவும், தாய் 36 வயதுடைய பெண் எனவும், உயிரிழந்த இரண்டு சிறுமிகள் 09 மற்றும் 03 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

வீட்டில் இரண்டு நாற்காலிகளில் இரு குழந்தைகளின் சடலங்களும், வீட்டின் படுக்கையறையில் மனைவியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவானின் பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...