விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்தார்: பிடியாணை வாபஸ் பெறப்பட்டது!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (13) பிடியாணை பிறப்பித்திருந்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தனது சட்டத்தரணியுடன் பிரேரணை விண்ணப்பம் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சுகயீனம் காரணமாக அவரால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பௌத்தலோக மாவத்தையில் பிரதான வீதிகளை மறித்து மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய போராட்டத்திற்கு விமல் வீரவன்ச மற்றும் ஐவர் தலைமை தாங்கியதாக கறுவாத்தோட்ட பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...