மலேசிய அரசாங்கம் சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளது.
மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சஃபுதீன் பின் ஸ்மைல் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மூல நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியது.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுமங்கலா டயஸும் கலந்துரையாடலில் இணைந்துள்ளார்.